4வது வந்தே பாரத் ரயில்...துவங்கி வைத்த பிரதமர் மோடி...!

4வது வந்தே பாரத் ரயில்...துவங்கி வைத்த பிரதமர் மோடி...!

இமாச்சல பிரதேசத்தின் உனா- டெல்லி இடையே நாட்டின் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைத்தார். 

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்:

மத்திய அரசின் "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ், உருவாக்கப்பட்ட ‘டிரெயின் 18’ என்றழைக்கப்படும் நடுத்தர விரைவு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2019ம் ஆண்டு  டெல்லி- வாராணாசி இடையே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயிலை நாடு முழுவதும் இயக்க திட்டமிட்டு, பின்னர் 2வது ரயில் வண்டி டெல்லி-  ஜம்மு-காஷ்மீரின்  கத்ரா இடையே இயக்கப்பட்டது.

4வது எக்ஸ்பிரஸ் ரயில்:

அண்மையில் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி குஜராத்தில் பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்த பிரதமர் மோடி 3வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மும்பை- குஜராத் இடையே குஜராத்தில் இருந்து அறிமுகம் செய்து வைத்து அதில் பயணித்தார். அந்த வரிசையில் தற்போது 4வது ரயிலை இமாச்சல பிரதேசத்தின் உனா ரயில் நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி கொடி அசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். 

இதையும் படிக்க: ஆ.ராசா வழக்கு: ஏழு வருடத்திற்கு பிறகு சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை...!

இந்த ரயில் 52 நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும், புதன்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களும் இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக இந்த ரயில் அம்பாலா, சண்டிகர், ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் உனா ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.