கேரளாவில் திருநங்கை அனன்யா மர்ம மரணம்... கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை...
கேரளாவில் பிரபல ஆர்ஜேவும், சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவருமான திருநங்கை அனன்யா குமாரி அலெக்ஸ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஜப்பான் செல்லும் அமெரிக்க ஜோ பைடன் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பானில் வருகிற 24-ந் தேதி நடைபெற உள்ளது.
குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜப்பான் செல்ல உள்ளார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அமொிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், குவாட் நாடுகள் இணைந்து சுதந்திரமாக செயல்படும் மற்றும் இந்தோ-பசிபிக் கொள்கைகளை பாதுகாத்து நிலைநிறுத்தும் என நம்புவதாக கூறினாா். குவாட் நாடுகள் புதிய பொருளாதார முன்முயற்சிகளை தொடங்க உள்ளனா். அவா்கள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பை (IPEF) ஏற்படுத்த உள்ளனா். இது 21 ம் நுற்றாண்டின் பொருளாதார ஏற்படாகும்.
இந்த புதிய பொருளாதார கட்டமைப்பானது, "டிஜிட்டல் பொருளாதாரத்தின் விதிகளை அமைப்பது, பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான விநியோகத்தை உறுதி செய்வது, நவீன உயர்தரமான உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது ஆற்றல் மாற்றத்தை நிர்வகிப்பது ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும்.
இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு தொடக்க நிகழ்ச்சியில் ஜோ பைடன் கலந்து கொள்ள உள்ளாா். இந்தோ-பசிபிக் நாடுகளை சோ்ந்த தலைவா்களும் இதில் பங்கேற்க உள்ளனா்.
இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இதே நிலை தொடர்ந்தால், கடந்த 38 ஆண்டுகளுக்கு முந்தைய மின்தட்டுப்பாடு நிலை ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் கோடை வெப்பம் சுட்டெரித்து வருவதால், கடும் வெயில் வாட்டி வருகிறது. வெப்பத்தை தணித்து கொள்ள மின்விசிறி, ஏர் கண்டிஷனர் உள்ளிட்ட மின் உபகரணங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் மின்சார பயன்பாடு அதிகரித்து, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மின் தேவை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு வெப்ப அலையால் மின் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்சியே காரணம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில், பலரும் வீட்டிலிருந்து பணியாற்றியதால், பகல் வேளைகளில் மின்தேவை அதிகரித்ததாகவும், இதனை ஈடுகட்ட தேவையான மின்சாரம் சூரிய சக்தி மூலம் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது பகல் வேளையை விட இரவு நேரங்களில் மின்சாரம் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதால், சோலார் பேனலால் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதும், மின்பற்றாக்குறைக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
மேலும் 80 சதவீதம் நிலக்கரி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும், அவற்றை ரயில்வே துறையால் விரைந்து விநியோகிக்க முடியாமல் இருப்பதாகவும், இறக்குமதிக்கான நிலக்கரி விலையும் அதிகரித்துள்ளதால் பல நிறுவனங்கள் இயங்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலை காரணமாக வரும் நாட்களில் மேலும் பல மின்தடை நிலையை மக்கள் எதிர்கொள்ள நேரிடும் எனவும், மின்பற்றாக்குறை நிலை 38 ஆண்டுகளில் இல்லாத நிலையை எட்டும் எனவும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
பள்ளிகளில் மாணவர்கள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படுவதை தடுக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பதை கட்டாயமாக்கலாம் என்றும் பணியிடங்களில் விசாகா வழிமுறைகள் இருப்பது போல் பாலியல் தொலையில் இருந்து பள்ளி குழந்தைகளை காக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
விசாகா கமிட்டி போல் பள்ளிகளிலும் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது பதிலளிக்க அனைத்து மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 6 வயது சிறுமி 5 உயிர்களை காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுடப்பட்ட நொய்டாவைச் சேர்ந்த சிறுமி ரோலி பிரஜாபதி, மருத்துவமனையில் அனுமதித்த போது மூளைச்சாவு அடைந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து உறுப்பு தானம் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் பேசியதைத்தொடர்ந்து அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டனர்.
அதன்படி சிறுமியின் கல்லீரல், சிறுநீரகங்கள் தானம் பெறப்பட்டன. இதன் மூலம் டெல்லி எய்ம்ஸ் வரலாற்றில் மிக இளம் வயது தானம் செய்பவர் என்ற பெருமையை ரோலி பெற்றுள்ளார்.
லஞ்சம் கேட்டு தமிழக லாரி ஓட்டுநரை மிரட்டி தாக்குதல் நடத்தும் கர்நாடக போலீஸ்.
தமிழகத்திலிருந்து சரக்கு லாரி ஒன்று நேற்று சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது ரோந்து பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் சிலர் லாரியை நிறுத்தி ஆவணங்களை கொடுக்க வலியுறுத்தினர். லஞ்சம் கேட்கும் நோக்கத்தோடு லாரியை காவல்துறை அதிகாரிகள் நிறுத்திய போது ஓட்டுநரை மிரட்டிய அவர்கள் ஓட்டுநரின் உதவியாளர் சாப்பிட்டு கொண்டிருந்த நிலையில் முதலில் சாப்பிடுவதை நிறுத்து உனது சீருடை எங்கே இது திருட்டு லாரி ஆகையால் லாரி வாங்கிய ரசீது வேண்டும் என அத்துமீறி நடந்து கொண்டனர்.
இதை ஓட்டுநர் முழுவதுமாக தனது கைபேசியில் படம் பிடித்த நிலையில் படம் பிடிப்பதை நிறுத்து என்று ஓட்டுநர் மீது காவல்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தினர். ஹிரியூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறை அதிகாரிகள் குறிப்பாக வெளி மாநிலத்தை சேர்ந்த லாரிகளை குறிவைத்து லஞ்சம் பெறுவதற்கு தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சண்முகப்பா குற்றம் சாட்டியுள்ளார். லாரி ஓட்டுனரிடம் அத்துமீறி நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பலமுறை நாங்கள் புகார் தெரிவித்தும் தொடர்ந்து ஹிரியூர் காவல்துறை அதிகாரிகள் லாரி ஓட்டுனர்களை தாக்குவதும் அத்துமீறி நடந்து கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் குறைந்தது 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் வசூலித்து வருகிறார்கள் இவர்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் லாரி டிரைவரை துன்புறுத்தி ஆவணங்கள் கேட்பது எவ்வாறு சரி. லஞ்சம் பூலல் இங்கு பெரிய விட்டது உடனடியாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்