கேரளாவில் திருநங்கை அனன்யா மர்ம மரணம்... கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை...
கேரளாவில் பிரபல ஆர்ஜேவும், சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவருமான திருநங்கை அனன்யா குமாரி அலெக்ஸ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு சொகுசு காரில் கடத்திய ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில், வாகனம் பறிமுதல்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில்கள் வாங்கி தமிழக பகுதிக்கு கடத்திவரப்பட்டு பல்வேறு பகுதிகளில் விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின்படி 10 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் உள்ளிட்ட அந்தந்த காவல் சரகத்திற்கு உட்பட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு சொகுசு காரில் மதுபானங்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரம் புதுக்கடை பாலம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க | மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி சடலமாக மீட்பு...
இதில் காரில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில் பெட்டியில் அடுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் நாகப்பட்டினம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் நாகப்பட்டினம் மருந்து கொத்தலரோடு பகுதியைச் சேர்ந்த விஜயகாந்த், மன்னார்குடி பூக்காரத்தெருவை சேர்ந்த பெருமாயி என்பது தெரியவந்தது. இதன் பின்னர் தனிப்படை போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரம் மதுபாட்டில்கள் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஆகியற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் படிக்க | கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது... 5 கிலோ கஞ்சா பறிமுதல்...
ராகுல்காந்தி பதவி நீக்க விவகாரம் பூகம்பமாக வெடித்ததால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று முடங்கின.
அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிகிறது என கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகாவில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாக, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரது எம்பி பதவிநீக்கம் செய்யப்படுவதாக அடுத்த நாளே மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து இன்றைய கூட்டத்திற்கு முன்னதாக மாநிலங்களவை எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில், கருப்புச்சட்டை அணிந்து எதிர்கட்சித்தலைவர்கள் ஆலோனை நடத்தினர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் முதன்முதலாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூடியது.
இதையும் படிக்க : சபாநாயகர் கேள்விக்கு சமாளித்த வானதி...சட்டப்பேரவையில் நிகழ்ந்த சுவாரசியம்...!
தொடர்ந்து மக்களவை கூடியதும், கருப்புச்சட்டை அணிந்து பதாகைகளுடன் ராகுல்காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் அவை கூடிய ஒரு சில நொடிகளிலேயே 4 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாகக் கூறி ஓம்பிர்லா உடனடியாக வெளியேறினார்.
அதேபோல், மாநிலங்களவையிலும் பதாகைகளை ஏந்தி அவைமுன் சென்று எதிர்கட்சியினர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் அறிவித்தார். தொடர்ந்து 2 மணிக்கு மீண்டும் அவை கூடிய நிலையில், ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி பதவி நீக்கம் விவகாரம் பூகம்பமாக வெடித்ததால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று முடங்கின.
அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிகிறது என கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகாவில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாக, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரது எம்பி பதவிநீக்கம் செய்யப்படுவதாக அடுத்த நாளே மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து இன்றைய கூட்டத்திற்கு முன்னதாக மாநிலங்களவை எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில், கருப்புச்சட்டை அணிந்து எதிர்கட்சித்தலைவர்கள் ஆலோனை நடத்தினர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் முதன்முதலாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூடியது.
இதையும் படிக்க : சட்டசபைக்கு கருப்பு புடவையுடன் வந்த பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்...!
தொடர்ந்து மக்களவை கூடியதும், கருப்புச்சட்டை அணிந்து பதாகைகளுடன் ராகுல்காந்திக்கு ஆதரவாக அவைத்தலைவர் ஓம்பிர்லா இருக்கை அருகே சென்று எதிர்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இந்நிலையில் நோட்டீசை ஓம்பிர்லா முன் கிழித்தெறிந்தும் ஆவேசத்துடன் கோஷங்களை எழுப்பியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை கூடிய ஒரு சில நொடிகளிலேயே 4 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாகக் கூறி ஓம்பிர்லா உடனடியாக வெளியேறினார்.
மாநிலங்களவையிலும் பதாகைகளை ஏந்தி அவைமுன் சென்று எதிர்கட்சியினர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் அறிவித்தார்.
நாட்டின் ஜனநாயகம் தங்கள் குடும்பத்தினரின் ரத்தத்தால் வளர்க்கப்பட்டதாக, டெல்லி காங்கிரஸ் சத்தியாகிரகப் போராட்டத்தில் பிரியங்கா காந்தி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
எல்லா சமூகத்தினரின் பெயரும் மோடி என்றே முடிவதாக, 2019ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். இதனால் மோடி சமூகத்தினரை ராகுல்காந்தி அவமதித்ததாக, பாஜக எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரது எம்பி பதவி, நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
இதற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடு முழுவதும் ஒருநாள் சத்தியாகிரகப் போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்தது. தொடர்ந்து டெல்லி ராஜ்கட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் 144 தடை உத்தரவையும் மீறி போராட்டம் நடைபெற்றது. இதில் பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க : பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்...திருப்பூரில் பரபரப்பு!
கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, நாடு முழுவதும் இனி சத்தியாகிரகங்கள் தொடரும் என குறிப்பிட்டார். ராகுல்காந்தி தேசத்திற்காகவே எப்போதும் போராடியதாகவும், கர்நாடகாவில் வழக்குப்பதிவு செய்ய தைரியம் இல்லாததாலேயே, குஜராத்திற்கு வழக்கை பாஜக மாற்றியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, தனது சகோதரர் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து எந்த வெறுப்பும் உங்கள் மீது இல்லை என குறிப்பிட்டதாகக் கூறினார். நாடாளுமன்றத்தில் தனது தந்தை அவமதிக்கப்பட்டதாகவும், ஆளுங்கட்சி அமைச்சர்கள் தனது தாயை அவமானப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அவர்கள் ஒருநாளும் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதில்லை எனவும் நாட்டிற்காக போராடியதற்காக தனது குடும்பத்தினர் வெட்கப்பட வேண்டுமா என கேள்வியெழுப்பிய அவர், தேசத்தின் ஜனநாயகம் தங்கள் குடும்பத்தினரின் ரத்தத்தால் வளர்க்கப்பட்டதாகக் கூறினார்.
டெல்லி ராஜ்கட்டில் போலீசாரின் தடையையும் மீறி ராகுல்காந்திக்கு ஆதரவாக மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்புடன் காங்கிரஸ் கட்சி போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.
எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவதாக, 2019ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். இதனால் மோடி சமூகத்தினரை ராகுல்காந்தி அவமதித்ததாக, பாஜக எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரது எம்பி பதவி, நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டெல்லி ராஜ்கட்டில் ஒருநாள் சத்தியாகிரகப் போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் முன்னதாக கார்கே வீட்டில் ஆலோசனையை முடித்துக்கொண்டு போராட்டத்திற்கு புறப்பட்டனர்.
இதையும் படிக்க : அதிகாரத்திமிரின் உச்சம்! – கண்டனம் தெரிவித்துள்ள சீமான்
தொடர்ந்து ராஜ்கட்டில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தடையையும் மீறி மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரசார் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.
முன்னதாக இதுகுறித்து பேட்டியளித்த கார்கே, ராகுல்காந்தியை பாஜக பேசவிடுவதில்லை என குற்றம்சாட்டினார். தேசத்திற்காகவும், பொதுமக்களின் உரிமைக்காகவும் போராடும் ராகுலுக்கு ஆதரவாக சத்தியாகிரகம் தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.