"வன்முறையில் இளைஞர்கள் யாரும் இறங்கிட வேண்டாம்" இளைஞர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் இன்று போராட்டம்!

மத்திய அரசின் அக்னிபத்  திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று சத்தியாகிரக போராட்டம் நடைபெறவுள்ளது. 

"வன்முறையில் இளைஞர்கள் யாரும் இறங்கிட வேண்டாம்" இளைஞர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் இன்று போராட்டம்!

4 ஆண்டுக்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் மத்திய அரசின் புதிய திட்டமான அக்னிபத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.  இத்திட்டத்தை எதிர்த்து, வடமாநிலங்களில் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 

இத்திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ள நிலையில், அக்னிவீரர்களுக்கு துணையாக இருப்போம் என்று உறுதியளித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, வன்முறையில் இளைஞர்கள் யாரும் இறங்கிட வேண்டாம் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த சூழலில், அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக, டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. ஜந்தர்மந்தரில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் எம்.பி.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.