சைபர் கிரைமை தடுக்க....   ஒன்றிய அரசு  உதவி எண் அறிவிப்பு 

இணைய வழியில் நடைபெறும் பணமோசடிகளை தடுக்க ஒன்றிய அரசு தேசிய அளவிலான உதவி எண்ணை அறிவித்துள்ளது.

சைபர் கிரைமை தடுக்க....   ஒன்றிய அரசு  உதவி எண் அறிவிப்பு 

நாகரிக  உலகில் தொழில்நுட்பங்கள் வளர வளர நன்மைகள் எந்த அளிவில் உள்ளதோ, அதே அளவில் தவறுகளும் நடைபெறுகிறது.

இணைய மோசடிகளில் பலர் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். லிங்கை கிளிக் செய்ய வேண்டும், முன்பணம் அனுப்ப வேண்டும் என்று பலர் பல விதங்களில் பேசி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் இணைய மோசடியில் பணத்தை இழக்காமல் இருக்க,கடந்த ஏப்ரல் 1-ந் தேதி ‘155260’ என்ற தேசிய உதவி எண்ணை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது . 

அத்துடன் அதற்கான புகார் தளத்தையும் ஒன்றிய அரசு தொடங்கியது. இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் மூலம் செயல்பட்டு வரும் இந்த புகார் தளம் மற்றும் உதவி எண் ரிசர்வ் வங்கி முதல் அனைத்து வங்கிகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது. இணைய மோசடியால் பாதிக்கப்பட்டவர் இதில் புகார் அளிப்பதன் மூலம் பணத்தை இழக்காமல் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

தற்போது, சத்தீஸ்கர், டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் என 7 மாநிலங்களில் இந்த நடைமுறை அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கடந்த இரண்டு மாதங்களில் ரூ.1 கோடியே 85 லட்சம், இணைய மோசடியாளர்களிடம் சிக்காமல் கைப்பற்றப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது