கொள்ளையனை பிடிக்க முயன்று உயிரை விட்ட வியாபாரி... உத்திரப்பிரதேசத்தில் பரிதாபம்...

கொள்ளையனை  பிடிக்க முயன்ற உயிரை விட்ட வியாபாரி

கொள்ளையனை பிடிக்க முயன்று உயிரை விட்ட வியாபாரி... உத்திரப்பிரதேசத்தில் பரிதாபம்...
உத்தரபிரதேசத்தில், கொள்ளையனை பிடிக்க முயன்ற, பாப்கார்ன் விற்பனையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிஜ்னோர் நகரில் உள்ள தனியார் தங்க நகைக்கடன் பைனான்ஸ் நிறுவனத்திற்குள் நுழைந்த ஒருவன், தங்க நகை கடன் குறித்து விசாரிப்பது போல் கொள்ளையில் ஈடுபட முயன்றுள்ளான்.
 
இதற்கென யாரிடமோ பேசுவது போல்  சிறிது நேரம் காத்திருந்த அவன்,  மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஊழியர்களை மிரட்ட முயன்றுள் ளான். ஆனால் அதற்குள் உஷாரான ஊழியர் ஒருவர், நிறுவனத்தின் அவசர கால சைரனை அழைத்து உதவி கேட்டுள்ளார்.
 
இதனால் சத்தத்தை கண்டு பயந்த ஓட முயன்ற அந்த நபரை, அங்கு பாப்கார்ன் விற்று கொண்டிருந்தவர் பிடிக்க முயன்றுள்ளார்.  இதில் வியாபாரி எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது உடல் நலம் குன்றி உயிரிழந்தாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.