இந்தநிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், போராட்ட பாதையை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களில் உள்ள ஆட்சேபகரமான அம்சங்களுடன் வந்தால், பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.