தடம்புரண்ட புதுச்சேரி விரைவு ரெயில்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!!

மகாராஷ்ட்ரா மாநிலம் மாட்டுங்கா ரயில் நிலையம் அருகே புதுச்சேரி விரைவு ரயில் தடம் புரண்டது. எனினும் நல்வாய்ப்பாக இந்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர்தப்பினர்.

தடம்புரண்ட புதுச்சேரி விரைவு ரெயில்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்!!

புதுச்சேரியில் இருந்து மகாராஷ்ட்ராவின்  தாதர் நோக்கிச் சென்று கொண்டிருந்த புதுச்சேரி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது மாட்டுங்கா என்ற இடத்தில் மற்றொரு தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயில் மீது லேசாக உரசிய விரைவு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன.

எனினும் இரு ரயில்களும் மெதுவாக இயக்கப்பட்டதால் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். பெட்டிகள் தடம்புரண்டதால் அப்பகுதி வழியே செல்லவிருந்த மற்ற ரயில்கள் தாதர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. இந்நிலையில் விபத்து நடந்த பகுதியில் மத்திய ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பிகே தாதாபாய் ஆய்வு மேற்கொண்டார்.  ரயில்பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.