இறுதி தருணம்...தாயார் உடலை தோளில் சுமந்து சென்ற பிரதமர்...!

இறுதி தருணம்...தாயார் உடலை தோளில் சுமந்து சென்ற பிரதமர்...!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல் குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தீவிர சிகிச்சையிலிருந்த மோடி தாயார்:

குஜராத் மாநிலம் காந்தி நகர் அருகே உள்ள ராய்சன் கிராமத்தில் தன் இளைய மகன் பங்கஜ் மோடியுடன் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் வசித்து வந்தார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மோடி தாயார் மரணம்:

இதனையடுத்து, பிரதமர் மோடி அகமதாபாத்திற்கு நேரில் சென்று, தனது தாயின் உடல் நலம் குறித்து விசாரித்ததுடன், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக ஹீராபென் மோடி இன்று அதிகாலை காலமானார். தொடர்ந்து, கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து காரில் காந்தி நகர் சென்றார். பின்னர் தனது இல்லத்தில்  வைக்கப்பட்டிருந்த தாயாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

உடல் தகனம்:

இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, தனது தாயாரின் உடலை சுமந்து செல்ல இறுதி யாத்திரை புறப்பட்டது. பின்னர், காந்தி நகரில் உள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் பங்கேற்றனர்.

மோடியின் ட்வீட்:

முன்னதாக தனது தாயாரின் 100-வது பிறந்தநாளில் அவரைச் சந்தித்ததை பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது என்றும்  தன் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்தேன் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.