செல்கள், புரதங்களை உருவாக்கும் செயல்முறையில் ஈடுபடும் ஒற்றை இழை ஆர்.என்.ஏ வகை, எம்.ஆர்.என்.ஏ என அழைக்கப்படும்.
இந்த தொழில்நுட்பம் வைரசின் தற்போதுள்ள அல்லது உருவாகும் உருமாற்ற வைரஸ்களுக்கு ஏற்ற வகையில் தடுப்பூசித் திறனை விரைவில் மாற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் எம்ஆர்என்ஏ தடுப்பூசியை புனேயில் உள்ள ஜெனோவா பயோபார்மசியூட்டிகல்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த தடுப்பூசிக்கு ஜெம்கோவாக் - 19 என பெயரிடப்பட்டுள்ளது. பாதுகாப்பானதாகவும், அதிக நோய் எதிர்ப்புத்திறன் கொண்டதாகவும் கருதப்படும் இந்த தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டு ஒப்புதலை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வழங்கியுள்ளது.