நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்..!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்..!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம் - அடுத்த மாதம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சோதனை நடைபெற உள்ளதாக
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;  

" தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த 2021ம் ஆண்டு நடத்தப்பட்டது. இதன்பிறகு, அண்டை மாநிலங்கள் உட்பட பல்வேறு மாநிலங்களில் பேரவைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்தலுக்கு நம்முடைய மாநிலத்தின் சில மாவட்டங்களில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போன்றவை அனுப்பப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இப்போது மக்களவைத் தேர்தலுக்கு நமது மாநிலமும் தயாராக வேண்டிருக்கிறது", என்றும், 

மேலும், இதன் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான விவிபேட் இயந்திரங்கள் ஆகியவற்றை மதிப்பிடும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவைக்கும் அதிகமாக 35 சதவீதம் அளவுக்கு இயந்திரங்கள் அளிக்கப்பட உள்ளன. உதாரணத்துக்கு, ஒரு மாவட்டத்துக்கு 200 வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைப்படும்பட்சத்தில், 270 இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இயந்திரங்களின் தேவை, தேர்தலுக்குத் தயாராகுதல் போன்ற பணிகளை மண்டல வாரியாக ஆய்வு செய்து வருவதாகவும், அண்மையில், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையும்  படிக்க     | ஒடிசா ரயில் விபத்து: சிபிஐ அதிகாரிகள் விசாரணை...!

அதோடு, மாவட்டங்களுக்குத் தேவைப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவி-பேட் இயந்திரங்கள் ஆகியன மதிப்பீடு செய்யப்பட்டு தேர்தல் துறைக்குச் சொந்தமான கிடங்குகளில் வைக்கப்படும். வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இயந்திரங்களில் முதல் நிலை சோதனை நடத்தப்பட்டு, மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் தன்மை குறித்து சோதனை நடத்திக் காண்பிக்கப்படும் என்றும் கூறினார். 

மேலும், தமிழகத்தில் 32 மாவட்டங்களில் தேர்தல் துறைக்கென சொந்தமாக கிடங்குகள் உள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் கிடங்குகள் இன்னும் கட்டப்படவில்லை என்றும், இதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்,

அதனைத்தொடர்ந்து ,  புதிய மாவட்டங்களில் அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள் வாடகையின் அடிப்படையில் பெறப்பட்டு அங்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உட்பட தேர்தலுக்கான தளவாடச் சாமான்கள் வைக்கப்படும் என்றும்  தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

இதையும்  படிக்க     |