தேசிய பங்கு சந்தையை ஆட்டிப்படைத்த இமயமலை மர்ம சாமியார் இவர்தானா..? உண்மையை சொன்ன சிபிஐ...!

தேசிய பங்கு சந்தையை இதுவரை ஆட்டிப்படைத்து வந்த மர்ம சாமியார் யார் என்பதை சுப்ரீம் கோர்ட்டில் போட்டு உடைத்தது சிபிஐ.

தேசிய பங்கு சந்தையை ஆட்டிப்படைத்த இமயமலை மர்ம சாமியார் இவர்தானா..? உண்மையை சொன்ன சிபிஐ...!

கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக   பணியாற்றி வந்தவர் தான் சித்ரா ராமகிருஷ்ணன். அப்போது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி குற்றம் சாட்டியது. அதுமட்டும் இல்லாமல் முன் அனுபவம் எதுவும் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகளும் வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் மர்மமான இமயமலை சாமியாரின் பேச்சை கேட்டுக் கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி  குற்றம் சாட்டியது.

இந்நிலையில், தேசிய பங்கு சந்தை விவரங்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் தலைமை செயலதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நரேன் மற்றும் அவரது சகோதரர் ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோருக்கு எதிராக மத்திய புலனாய்வு பிரிவு (சி.பி.ஐ.) கடந்த பிப்ரவரி 18ந்தேதி லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது. 

இதன் தொடர்ச்சியாக, முன்னாள் செயலாக்க அதிகாரியாக செயல்பட்டு வந்த ஆனந்த் சுப்பிரமணியம், சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த மாதம் 24ந்தேதி இரவு சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார். இருப்பினும் இந்த வழக்கில் கூடுதலாக இருவருக்கு தொடர்பு உள்ளது என்றும் கூறப்படும் நிலையில், ஆனந்திடம் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து யார் அந்த இமயமலை யோகி என்ற விவாதம் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த இமயமலை சாமியார் என தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே தான் ஆனந்த் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் ஆனந்த் சுப்ரமணியன் தான் இமயமலை சாமியார் எனவும், அவர் தான் சாமியார் போல் நடித்துள்ளதாகவும், அவரிடம் தெரிந்தே சித்ரா ராமகிருஷ்ணன் பல ரகசிய தகவல்களை பகிர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்ல மர்மமான சாமியார் வேடத்தில் உலாவி வந்த சுப்ரமணியனே பங்கு சந்தை முடிவுகளிலும் தலையிட்டுள்ளார். சுப்ரமணியனுக்கு ஜாமின் வழங்க கூடாது என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் சுப்ரமணியனுக்கு ஜாமீன் வழங்கும் தனது உத்தரவை மார்ச் 24ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.