வினாத்தாள் வெளியானதால் ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து..!!

வினாத்தாள் வெளியானதால் உத்தரப்பிரதேசத்தில் நேற்று நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

வினாத்தாள் வெளியானதால்  ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து..!!

 உத்தரபிரதேசத்தில் நேற்று ஆசிரியர் தகுதித் தேர்வு நடப்பதாக இருந்தது. மாநிலம் முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் தேர்வு எழுத இருந்தனர். ஆனால், தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்ததை தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் மாநிலம் முழுவதும் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அரசுக்கு முறைப்படி போலீஸார் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டது.