இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தியா? குழப்பத்தில் மக்கள்!

சீரம் நிறுவனம் இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தியை செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தியா? குழப்பத்தில் மக்கள்!

சீரம் நிறுவனம் இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தியை செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசியை, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள இந்திய சீரம் நிறுவனம், இந்தியாவில் தயாரித்து வினியோகித்து வருகிறது. தற்போது சீரம் நிறுவனம், உலகின் முதல் கொரோனா தடுப்பூசியான ரஷ்ய நாட்டின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரித்து வினியோகிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி இந்திய சீரம் நிறுவனம், வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்யத் தொடங்கும் என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் அறிவித்துள்ளது. அங்கு ஆண்டுக்கு 30 கோடி ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசியை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப மாற்ற செயல்முறைகளின் ஒரு பகுதியாக, புனே இந்திய சீரம் நிறுவனமானது, ரஷ்யாவின் கமலேயா மையத்தில் இருந்து செல் மற்றும் வெக்டர் மாதிரிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.