இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்திய பெண்... சுபத்ராகுமாரியை கவுரவித்த கூகூள்...

சுபத்ரா குமாரி பிறந்தநாளையொட்டி சிறப்பு டூடுல் 

இலக்கியத்தில் ஆதிக்கம் செலுத்திய பெண்... சுபத்ராகுமாரியை கவுரவித்த கூகூள்...

இலக்கியத்தில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற எழுத்தாளரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சுபத்ரா குமாரி சவுகானின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.  

உத்திரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள நிகழ்பூா் என்னும் கிராமத்தில் கடந்த 1904 ஆம் ஆண்டு பிறந்தவர் சுபத்ரா குமாரி சவுஹான். இவர், தனது கவிதையின் மூலம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராட மக்களை ஒன்று திரட்டினார்.

இந்நிலையில் கவிஞர் சுபத்ரா குமாரி சவுஹானின் 117 -வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.