சிகிச்சை பலனின்றி சிவசேனா தலைவர் உயிரிழப்பு...!!!

சிகிச்சை பலனின்றி சிவசேனா தலைவர் உயிரிழப்பு...!!!

அமிர்தசரஸில் நடந்த போராட்டத்தின் போது சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுடப்பட்டார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இரண்டு குண்டுகள் அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், குண்டுகள் மார்பு பகுதியில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இதை பட்டப்பகலில் நடந்த கொலைவெறி தாக்குதல் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    இந்திய அஞ்சல் துறை காலியான பணியிடங்கள்...எப்படி விண்ணப்பிப்பது...எவ்வளவு பணியிடங்கள்...வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்!!!