பாஜகாவின் சூழ்ச்சியால் ஹெலிகாப்டர் டெல்லியில் தடுத்து நிறுத்தப்பட்டது - சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

பாஜகாவின்  சூழ்ச்சியால்  ஹெலிகாப்டர் டெல்லியில் தடுத்து நிறுத்தப்பட்டது - சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

பாஜகவின் சூழ்ச்சியால், உத்தரபிரதேசம் புறப்பட இருந்த தனது ஹெலிகாப்டர் டெல்லியில் தடுத்து நிறுத்தப்பட்டதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டியுள்ளார்.  

இதனை டுவிட்டரில் உறுதி செய்த அவர், காரணமின்றி தனது ஹெலிகாப்டர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதே வேளையில் பாஜக தலைவர் ஒருவர் டெல்லியிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட அனுமதிக்கப்பட்டதாகவும், தனது பயணத்தை தடுக்க பாஜக சூழ்ச்சி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  ஆட்சியை தக்க வைக்க பாஜக, தீவிரம் காட்டி வருகிறது. ஆனால்  சமாஜ்வாடி ஆட்சியை பிடிக்கும் என ஆரூடங்கள்  தெரிவிப்பதால்  அகிலேஷுக்கு எதிராக  பாஜக  பல முட்டுக்கட்டைகள் போட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.