குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

கர்நாடகாவில் குளிர்சாதன பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஓரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

விஜயநகர மாவட்டம் மாரியம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதி வெங்கட் பிரஷாந்த்- சந்திரகலா.

இவர்களின் வீட்டில் திடீரென மின்கசிவு மற்றும் குளிர்சாதன பெட்டி வெடித்ததில் தீப்பற்றி எரிந்து புகை சூழ்ந்தது. அப்போது வெங்கட் பிரஷாந்த், சந்திரகலா மற்றும் அவர்களது குழந்தைகளுடன் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், உள்ளே சென்று பார்த்த போது நால்வரும் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர். இதனையடுத்து அவர்களது உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.