வங்கி பணியாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. ரிசர்வ் வங்கியின் ஹாப்பி அனோன்ஸ்மெண்ட்
வங்கிகளுக்கு ஜூலை மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை தினமாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

பீகாரில் 10ம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அவர் மீது மோதிய லாரியை கிராமத்தினர் தீ வைத்துக் கொளுத்தினர். சிவானில் உள்ள ஓர்மா நெடுஞ்சாலையில், பயிற்சி வகுப்புக்குச் சென்ற 10ம் வகுப்பு மாணவி மீது லாரி மோதியதாகத் தெரிகிறது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில், மாணவியின் உடலை நெடுஞ்சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவி மீது மோதிய லாரிக்கு தீ வைக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
மேலும் படிக்க | கடும் வெப்பத்தால் ஏற்பட்ட காட்டுத்தீ.... பலியானோர் எண்ணிக்கை உயர்வு!!
திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல்முறையாக இன்று முதல் கோவிலுக்கு வெளியே எண்ணப்பட உள்ளது.
திருப்பதி | ஏழுமலையானை தினமும் சுமார் 80,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். பக்தர்களின் காணிக்கை மூலம் ஏழுமலையானானுக்கு தினமும் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையும், ஒரு சில நாட்களில் ஏழு கோடி ரூபாய் வரை கூட வருமானமாக கிடைத்துள்ளது.
பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம்,ஆபரணங்கள் ஆகியவற்றை கோவிலுக்கு உள்ளேயே கணக்கிட்டு பணத்தை வங்கிகளில் தேவஸ்தான நிர்வாகம் செலுத்தி வந்தது. காணிக்கையாக கிடைக்கும் ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலத்திற்கு பாதுகாப்பாக எடுத்து சென்று அங்கு அவற்றை அவற்றை பத்திரப்படுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | பெருமாள் கோயிலுக்கு 25 கிலோ வெள்ளி கவசம் நன்கொடை...
கோவில் வளாகத்தில் இடவசதி இன்மை போன்ற காரணங்களால் காணிக்கையாக கிடைக்கும் பணம்,ஆபரணங்கள் ஆகிவற்றை கோவிலுக்கு வெளியே கணக்கிட தேவஸ்தான நிர்வாகம் ஓர் ஆண்டுக்கு முன் முடிவு செய்தது.
இந்த நிலையில் 23 கோடி ரூபாய் செலவில் ஏழுமலையான் கோவிலுக்கு வெளியே அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட காணிக்கை பணம் கணக்கிடும் வளாகம் கட்டப்பட்டது. அந்த வளாகத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த பிரம்மோற்சவத்தின் போது திறந்து வைத்தார்.
மேலும் படிக்க | 1.9 கோடி ரொக்கம், 1.6 கிலோ தங்கம் உண்டியல் காணிக்கை...
காணிக்கை பணம் கணக்கிடுவதை பக்தர்கள் வெளியில் இருந்து பார்க்கும் வகையில் அந்த வளாகத்தில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக அதி நவீன சிசிடிவி கேமராக்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று முதல் காணிக்கையாக கிடைக்கும் பணத்தை புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டபத்தில் கணக்கிடுவதற்காக இன்று காலை சில்லரை நாணயங்களை மூட்டி மூட்டையாகவும், பணத்தாள்களை பண்டல் பண்டலாகவும் கட்டி கோவிலில் இருந்து மொத்தமாக வெளியில் கொண்டு வந்தனர்.
இன்று காலை 10 மணிக்கு மேல் புதிய மண்டபத்தில் பூஜைகள் நடத்தி அங்கு தேவஸ்தான வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் கோவிலுக்கு வெளியே பக்தர்களின் காணிக்கை பணம் உள்ளது.
மேலும் படிக்க | தீபத்திருவிழா...அதிகாரிகளுக்கு அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு...!
ராமேஸ்வரத்தில் படகுப் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்ட பாம்பன் பாலத்தை, 50க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கடந்து சென்றன.
பாம்பன் பாலம் :
தமிழ்நாட்டுடன் ராமேஸ்வரத்தை இணைக்கும் 108 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாம்பன் பாலத்தில், நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது, சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, பாலத்தில் ரயில் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கூட்டநெரிசலில் 4 பெண்கள் உயிரிழந்ததற்கு...காரணம் இதுதான்...ஈபிஎஸ் குற்றச்சாட்டு!
பாலத்தை கடந்த மீன்பிடிப் படகுகள் :
இந்நிலையில், படகுப் போக்குவரத்திற்காக பாம்பன் பாலம் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் பாலத்தை கடந்து செல்கின்றன.
#WATCH | Tamil Nadu: The suspension Railway Bridge in Pamban opened for fishing boats in Rameswaram. More than 50 fishing boats crossed the bridge. pic.twitter.com/GRVZUrPO05
— ANI (@ANI) February 5, 2023
புதுச்சேரியில் பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே ப்ரீ-பெய்டு மின் கட்டணம் செலுத்த அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதையும் படிக்க : 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம்...!
இந்நிலையில் புதுச்சேரியில் பிரீபெய்ட் மீன் மீட்டர் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து, ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
கேரளாவில் இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு சார்பில் நடத்தப்பட்ட வான்வழி சாகசங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
திருவனந்தபுரத்தில் உள்ள சங்குமுகம் கடற்கரையில் இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு, பிரமிக்க வைக்கும் வான் சாகசங்களை நிகழ்த்திக்காட்டினர். இந்த வான்வழி சாகச காட்சிகளை நிர்வாகிகளும், அப்பகுதியில் குழுமியிருந்த பொதுமக்களும் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
மேலும் இந்த சாகங்களுக்கான ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: விவசாயிகள் வேதனை..... பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்....