"பாரத் ஜோடோ யாத்ரா” பயணம்...சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ராகுல்!

"பாரத் ஜோடோ யாத்ரா” பயணம்...சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ராகுல்!

இந்திய ஒற்றுமைக்கான பாரத் ஜோடா நடைபயணத்தை கேரளாவில் 3ம் நாளாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தொடங்கியுள்ளார்.

இந்திய ஒற்றுமை பயணம்:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி “பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரில் 150 நாட்கள் கொண்ட இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் இந்த ஒற்றுமை நடைப்பயணம், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மத்திய அரசுக்கு எதிராகவும் தொடங்கியதாக கூறப்பட்டது.

வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு:

கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் முன்பு தொடங்கிய இந்த நடைப்பயணம் அகஸ்தீஸ்வரம், நாகர்கோவில், தக்கலை வழியாக நான்கு நாட்கள் தமிழகத்தில் பயணத்தை தொடர்ந்த ராகுல்காந்திக்கு, வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதையும் படிக்க: மீண்டும் தன் வெற்றியை நிரூபித்த ஈபிஎஸ்....அதிமுகவில் ஓபிஎஸ்சின் நிலை என்ன?

தமிழகத்தில்யணம் முடிவு:

தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் பயணம் செய்த ராகுல் காந்தி, 10 ஆம் தேதி இரவுடன் தனது தமிழ்நாடு பயணத்தை முடித்துவிட்டார். இந்த பயணத்தில் சுமார் தமிழகத்தில் மட்டும் ராகுல்காந்தி 56 கிலோ மீட்டர் நடந்ததாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கேரளாவில் பயணம் தொடக்கம்:

இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி இரவு கேரள மாநிலத்திற்குள் அடியெடுத்து வைத்த அவர், பாறசாலையில் உள்ள செறுவாரக்கோணத்தில் ஓய்வெடுத்தார். இந்த நிலையில், 5ம் நாளான நேற்று, செறுவாரக்கோணத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி ராகுல்காந்தி தனது நடைப்பயணத்தை தொடங்கினார். கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பியான ராகுல்காந்திக்கு அங்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கேரளாவில் 2 ஆம் நாள் பயணம்:

இதைத் தொடர்ந்து கேரளாவில் தனது 2ஆம் நாள் பயணத்தை திருவனந்தபுரத்தில் வெள்ளையானி பகுதியில் இருந்து ராகுல் காந்தி தொடங்கினார். இந்த பயணத்தில் ராகுலுடன் 300க்கும் மேற்பட்ட காங்கிரசார் நடைபயணம் மேற்கொண்டனர். 

7 வது நாள் பயணம்:

இந்தநிலையில் இன்று 7வது நாளாக பயணத்தை தொடங்கியுள்ள ராகுல் காந்தி, திருவனந்தபுரம் அருகேவுள்ள களக்கோட்டம் நகரில் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். இந்த பயணத்தில் அவர், சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஒன்றிணைத்து வருகிறார்.