பாஜக கூறிய சர்ச்சை கருத்து...தக்க பதிலடி கொடுத்த ராகுல் காந்தி!

பாஜக கூறிய சர்ச்சை கருத்து...தக்க பதிலடி கொடுத்த ராகுல் காந்தி!
Published on
Updated on
1 min read

பாலியல் வன்கொடுமையாளர்களை பாதுகாக்கும் கீழ்த்தரமான அரசியலைச் செய்ய வெட்கமாக இல்லையா என பிரதமர் மோடியை நோக்கி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

பில்கிஸ் பனோ வழக்கு:

கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தில், 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பனோ என்ற இஸ்லாமியப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு 3 வயது குழந்தை உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரையும் 15 ஆண்டுகால சிறை வாசத்துக்குப்பின் குஜராத் அரசு சமீபத்தில் விடுவித்தது.

அறிக்கை வெளியிட்ட பெண்:

தொடர்ந்து, விடுதலை ஆன  11 பேருக்கும் அவரவர்  குடும்பத்தார் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்ட நிலையில், நீதித்துறை மீதான தனது நம்பிக்கை அசைக்கப்பட்டு விட்டதாக பில்கிஸ் பனோ அறிக்கை வெளியிட்டார்.

சர்ச்சைக்கருத்து:

இந்நிலையில் விடுதலை முடிவை முன்மொழிந்த பரிந்துரைக் குழுவில் இடம்பெற்ற சி.கே.ராவோல்ஜி என்ற பாஜக எம்எல்ஏ, 11 பேரும் பிராமணர்கள் என்பதால் நல்லவர்கள் என சர்ச்சைக்கருத்து வெளியிட்டார்.

ராகுல் விமர்சனம்:

இதைத்தொடர்ந்து உன்னாவ் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியான பாஜக எம்எல்ஏ ஆதரிக்கப்பட்டதையும், கத்துவாவில் 8 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் வன்புணர்வாளர்களை ஆதரித்து பேரணி சென்றதையும் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், தற்போது ”கூட்டு பாலியல் வழக்கில் கைதான 11 பேர் உச்சபட்ச மரியாதையுடன் விடுவிக்கப்பட்டதாகவும்,  வன்புணர்வாளர்களை காப்பதுமே பாஜகவின் வேலையா? ” எனவும் கேள்விகளை எழுப்பி அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே, பாஜக மீது மத அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், தற்போது பாஜக எம்.எல்.ஏ, பிராமணர்கள் என்றாலே நல்லவர்கள் என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com