மகாத்மா காந்தியைப் போல ராகுல் காந்தி வருவார் - கே.எஸ்.அழகிரி!

மகாத்மா காந்தியைப் போல ராகுல் காந்தி வருவார் - கே.எஸ்.அழகிரி!

மகாத்மா காந்தி கட்சியின் தலைவராக இல்லாமல் காங்கிரசை வழிநடத்தியதைப் போல ராகுல் காந்தியும் கட்சியை வழி நடத்துவார் என்று கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.

இந்திய ஒற்றுமைக்கு நடைபயணம்:

'இந்திய ஒற்றுமைக்கு நடைபயணம்” என்ற பெயரில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்தான ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் எம்.பி, முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: மறைமுகமாக ஈபிஎஸ்க்கு ஆதரவு அளிக்கிறாரா ஸ்டாலின்..?

மகாத்மாகாந்தி வழியை பின்பற்றும் ராகுல்:

இந்நிகழ்ச்சிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.எஸ்.அழகிரி, கட்சியை விட்டுச் செல்லும் எவரும் விஷத்தைக் கக்கிவிட்டு செல்வது போல்தான் குலாம் நபி ஆசாத்தும் பேசியுள்ளதாக தெரிவித்தார். மேலும், மகாத்மா காந்தி  காங்கிரஸ் கட்சியின் தலைவராக இல்லாமலேயே காங்கிரஸை வழிநடத்தினார். அதைப்போல தேவைப்பட்டால் ராகுல் காந்தியும்  காந்தியைப் போல வருவார் என்றும் கூறினார்.