வெளிநாட்டிலிருந்து வந்த 6 பயணிகளுக்கு கொரோனா தொற்று... ஒமிக்ரான் உள்ளதா என பரிசோதனை...

11 சர்வதேச விமானங்கள் மூலம் இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு வந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில், 6 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்த 6 பயணிகளுக்கு கொரோனா தொற்று... ஒமிக்ரான் உள்ளதா என பரிசோதனை...

ஒமிக்ரான் அபாயம் உள்ள நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொர்சீயஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்கான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் இருந்து 11 சர்வதேச விமானங்கள் மூலமாக இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு  வந்த மூவாயிரத்து 476 பயணிகளிடம் நடத்தப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. 

இவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதா? என கண்டறிய மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேருக்கும் மிதமான பாதிப்புகளே உள்ளது எனவும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி நடப்பதகாவும் மராட்டிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக அபாய நாடுகள் என பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, விமான நிலையங்களில் நேற்று முதல் தீவிர கண்காணிப்பு, மற்றும் பரிசோதனை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.