'ஸ்வச் சர்வேக்ஷன்' 5- வது இடத்தில் இருந்து 9- வது இடத்திற்கு சரிந்த புனே நகரம்...!

மத்திய அரசு சார்பில் ஸ்வச் சர்வேக்ஷன் நடத்திய ஆய்வில் புனே நகரம் 5 - வது இடத்தில் இருந்து 9 - வது இடத்திற்கு சரிந்துள்ளது.

'ஸ்வச் சர்வேக்ஷன்' 5- வது இடத்தில் இருந்து 9- வது இடத்திற்கு சரிந்த புனே நகரம்...!

மத்திய அரசு சார்பில் ஸ்வச் சர்வேக்ஷன் நடத்திய ஆய்வில் புனே நகரம் 5 - வது இடத்தில் இருந்து 9 - வது இடத்திற்கு சரிந்துள்ளது.   

ஸ்வச் சர்வேக்ஷன் என்றால் என்ன..?

மத்திய அரசு ஆண்டுதோறும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 45 நகரங்களில் உள்ள அதன் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்து கணக்கெடுத்து அதன் முடிவுகளை வெளியிடும். 

ஸ்வச் சர்வேக்ஷன் - 2022 :

தூய்மை பற்றிய வருடாந்திர கனெக்கெடுப்பான இந்த ஸ்வச் சர்வேக்ஷன் 2022 இன் முடிவுகளை மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது. அதில் முதல் மூன்று இடங்கள் முறையே, இந்தூர்( மத்திய பிரதேசம்), சூரத் (குஜராத்), நவி மும்பை (மகாராஷ்டிரா) ஆகிய நகரங்கள் பெற்றுள்ளன. முதல் இடம் பிடிக்கும் நகரத்திற்கு மத்திய அரசு ஸ்வச் சர்வேக்ஷன் என்ற பெயரில் விருந்தளிக்கும். அந்த வகையில் இந்தூர் நகரம், தொடர்ந்து ஆறாவது முறையாக இந்த முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. 

5- வது இடத்தில் இருந்து 9 - வது இடத்திற்கு சென்ற புனே :

அந்த வகையில் புனே நகராட்சி நிறுவனம் (பிஎம்சி) இந்த ஆண்டு ஸ்வச் சர்வேக்ஷன் போட்டியில், முதல் 10 நகரங்களில் 9- வது இடத்தை பெற்றுள்ளது. ஐந்தே நகரம் கடந்த ஆண்டு வெளியான முடிகளில் 5- வது இடத்தை பிடித்தது. அதாவது 4 இடங்கள் சரிந்து 9- வது இடத்தில் உள்ளது.   

பிஎம்சி இன் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஸ்வச் சர்வேக்ஷனுக்கான குப்பை மேலாண்மை வேலையில் நகராட்சி நிர்வாகம் கடினமாகவும் சிறப்பாகவும் பணியாற்றியது. இருப்பினும் குடிமக்களின் கருத்து அதன் தரவரிசையில் தடையாக இருந்திருக்கலாம். மேலும், மகாராஷ்டிராவின் தூய்மையான நகரங்களில் புனே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, இதன்மூலம் அதன் மூன்று நட்சத்திர தரவரிசையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. பிம்ப்ரி-சின்ச்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் (பிசிஎம்சி) இந்த ஆண்டு ஸ்வச் சர்வேக்ஷனில் 19 வது இடத்திற்கு நகர்ந்து, மாநிலத்தின் தூய்மையான நகரங்களில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது என தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவித்த பிஎம்சி தலைவர் :

இதுகுறித்து, பிஎம்சியின் திடக்கழிவு மேலாண்மை தலைவர் ஆஷா ராவத், " இந்த முறை இந்த போட்டிக்கு பெரிதும் தயாரானோம்,அதற்காக எல்லா வகையிலும் தூய்மையை பராமரிக்க பெரிதும் உழைத்தோம். மேலும் இந்த உழைப்பை சீரான முறையில் அடுத்த 2023 ஆம்  ஆண்டிலும் தொடர்வோம். தற்போதும் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பிசிஎம்சியை ஒப்பிடும் போது பிஎம்சி நகரம் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது. மேலும் நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்று பகுப்பாய்வு திட்டமிட இருக்கிறோம் " என்று கூறினார்.