”செழிப்பாக உள்ள வடகிழக்கு இந்தியா...” சர்பானந்தா சோனோவால்!!!

”செழிப்பாக உள்ள வடகிழக்கு இந்தியா...” சர்பானந்தா சோனோவால்!!!

வடகிழக்கு இந்தியா செழிப்பாக உள்ளது.  நமது செழுமையான பாரம்பரியத்தை மக்களுக்கு உணர்த்த அதன் செழுமை உலகை சென்றடைய வேண்டும் என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் அஸ்ஸாமின் பராக் பள்ளத்தாக்குக்கான நீர்வழித் திட்டங்களை ஆய்வு செய்த பின்னர் கூறியுள்ளார்.  

மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், உள்நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய தகவல் தொடர்பு சாதனமாக நீர்வழிகள் உள்ளதால், உள்நாட்டு நீர்வழிகளின் முழு திறனை உணர மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.  வடகிழக்கு மாநிலங்களில் அதிக பொருளாதார எழுச்சியை உறுதி செய்வதில் நீர்வழிகளின் பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டினார் சர்பானந்தா சோனோவால்.

அஸ்ஸாமின் பராக் பள்ளத்தாக்குக்கான நீர்வழித் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், வடகிழக்கு இந்தியா செழிப்பானது என்றும், நமது வளமான பாரம்பரியம் மக்களுக்குப் பயனளிக்கிறது என்றும் கூறினார்.

மேலும் செல்வம் உலகை அடைய வேண்டும் எனவும் வடகிழக்கு மாநிலங்களின் உள்நாட்டு நீர்வழிகள் மக்களின் உற்பத்திகளை உலகம் முழுமைக்கும் கொண்டு செல்வதில் திறமையானதாகவும் செலவு குறைந்ததாகவும் ஒரு அற்புதமான வாய்ப்பாக உள்ளது எனத் தெரிவித்தார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ஆசியான் கூட்டத்தில் பங்கேற்க கம்போடியா செல்கிறார் ராஜ்நாத் சிங்!!!