அடுத்த ஆண்டு உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தல்... கட்சியை பலப்படுத்த பிரியங்கா வேண்டுகோள்...

கங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணியில் தொண்டர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தல்... கட்சியை பலப்படுத்த பிரியங்கா வேண்டுகோள்...
கங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணியில் தொண்டர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது பணிகளை தொடங்கிவிட்டன.
 
அதன்படி கங்கிரஸ் சார்பில் தொண்டர்களை தேர்தல் பணிக்கு ஆயத்தப்படுத்தும் வகையிலான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது, இதில் காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எதிராக ஒரு பொது இயக்கம் தொடங்கப்பட வேண்டும் என்றும், கட்சியை பலப்படுத்தும் பணி மிக முக்கியமானது எனவும் கூறினார்.