பாரத் பெட்ரோலியம் விற்பனைக்கு..! 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி...
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை முழுவதும் தனியார்மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சைத்ர நவராத்தியின் 7-ம் நாள் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பங்குனி மாத அமாவாசை பிறகு வரும் ஒன்பது நாட்கள் சைத்ர நவராத்திரி என்று கொண்டாட்டப்படு வருகிறது.
குறிப்பாக வட மாநிலங்களில் அதிகம் கொண்டாடப்படும் சைத்ர நவராத்திரி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சைத்ர நவராத்திரியின் 7-ம் நாளான இன்று மும்பை தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன் ஆர்த்தி உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாடு முழுவதும் 800 கோடி ரூபாய் செலவில் மின்சார வாகனங்களுக்கான 7 ஆயிரத்து 432 ‘சார்ஜிங்’ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி தகவல் தொிவித்துள்ளாா். கார்பன் கழிவுகள் இல்லா சுற்றுச்சூழலை உருவாக்க மின்சார வாகனங்களை பயன்படுத்துவது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
தற்போது நாடு முழுவதும் 6 ஆயிரத்து 586 சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் 800 கோடி ரூபாய் செலவில் மேலும் 7 ஆயிரத்து 432 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதித்து உள்ளதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்து உள்ளார். இந்தப்பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் எனவும் அவா் தொிவித்துள்ளாா்.
நாடாளுமன்ற உறுப்பினா் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், டெல்லியில் அமைதி பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தலைவர்களை காவல்துறையினா் கைது செய்தனர்.
பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, அவரது நாடாளுமன்ற பதவியை அதிரடியாக பறித்தது. இதன் தொடர்ச்சியாக, அரவது அலுவலகத்தை காலி செய்ய கூறி, நோட்டீசும் அனுப்பப்பட்டு உள்ளது.
அடுத்தடுத்து நடந்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்வினையாற்றி வருகிறது. இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற வளாக பகுதியில் கருப்பு சட்டை அணிந்து பேரணி செல்வது என தொடர்ச்சியாக அக்கட்சியினர் பல பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இரவு 7 மணியளவில் ஒன்று திரண்டு போராட்த்தில் ஈடுப்பட்டனா். பின்னா் அவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தி
கைது செய்தனர்.
டெல்லி செங்கோட்டையில் இருந்து காங்கிரஸ் எம்பிக்களின் பேரணி நடைபெறுவதாக கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிகிறது என கடந்த 2019ம் ஆண்டு ராகுல்காந்தி பேசியதை சாடி, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவரது எம்பி பதவி, தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்ட மக்களவை செயலகம், வரும் 22ம் தேதிக்குள் அரசுக்குடியிருப்பை காலி செய்யுமாறு அவருக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது. இதையெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்து வருகின்றனர்.
இதையும் படிக்க : சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்து வீசியெறிந்து ஆவேசம்...இரு அவைகளும் ஒத்திவைப்பு!
அந்த வகையில், எம்பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுமதியளிப்பது தொடர்பான தொடர் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில், இன்று மாலை 7 மணிக்கு காங்கிரஸ் எம்பிக்கள் பேரணி நடைபெறும் எனவும், அடுத்த 30 நாட்களில் ஜெய் பாரத் சத்தியாகிரகம் என்ற பெயரில் நாடு முழுவதும் காங்கிரஸ் பேரணி நடைபெறும் எனவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.
ராகுல்காந்தி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது. மக்களவையில் சபாநாயகரை பேச விடாமல், காகிதங்களை கிழித்து அவர் முகத்தில் எதிர்கட்சியினர் வீசியெறிந்ததால், ஒரு சில நொடிகளிலேயே அவை ஒத்திவைக்கப்பட்டது.
அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிகிறது என 2019ம் ஆண்டு ராகுல்காந்தி பேசியதை சாடி, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவரது எம்பி பதவி, தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்ட மக்களவை செயலகம், வரும் 22ம் தேதிக்குள் அரசுக்குடியிருப்பை காலி செய்யுமாறு அவருக்கு நோட்டீசும் அனுப்பியது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் 2ம் நாளாக கருப்பு உடையணிந்து எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதையும் படிக்க : அதிமுக பொதுக்குழு வழக்கு: ஈபிஎஸ்க்கு ஆதரவாக அமைந்த தீர்ப்பு... ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட மூவ் என்ன?
தொடர்ந்து மக்களவை கூடியதும், ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கருப்புக் கொடிகளுடன் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, எதிர்கட்சியினர் முழக்கம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் காகிதங்களை கிழித்து சபாநாயகரை பேச விடாமல், அவர் முகத்தில் வீசியெறிந்ததால் அவை கூடிய ஒரு சில நிமிடங்களிலேயே 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 2 மணிக்கு மக்களவை கூடிய நிலையில், அவைத்தலைவரை பதாகைகளை வைத்து மறைத்தும் கோஷங்கள் எழுப்பியும் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் அவை முன் சென்று ராகுல்காந்திக்கு ஆதரவாக எதிர்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அமளி நீடித்ததால், மாநிலங்களவையும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 2 மணியின் போதும் அமளி தொடர்ந்ததால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.