ஜி20 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி...

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெறும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்டார்.

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி...

நாளை மற்றும் நாளை மறுநாள் ரோம் நகரில் நடைபெறும் 16-வது ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஜி20 மாநாட்டுக்கு இடையே இத்தாலி பிரதமர் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து, பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அதன் பின்னர், பருவ நிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்க கிளாஸ்கோ செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் 26-வது கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாடு நவம்பர் மாதம் 1 முதல் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.