பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி விடுவித்தார் பிரதமர் மோடி...

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 20,000 கோடி ரூபாய் நிதியை பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி  விடுவித்தார் பிரதமர் மோடி...

மத்திய அரசின் திட்டமான பிரதான் மந்திரி திட்டத்தினை நரேந்திரமோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் நாடுமுழுவதும் உள்ள தகுதி வாய்ந்த விவசாயிகள் பட்டியலானது தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு உதவிடும் வகையில் வருடத்திற்கு 24,000 ரூபாய் ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்கப்படுகிறது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 4 தவணைகளாக 6,000 ரூபாய் பிரித்து வழங்கப்படுகிறது. இந்த நிதி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதுவரை 9 தவணைகளாக நிதி உதவி வழங்கப்பட்ட நிலையில் இன்று பத்தாவது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் பிரித்து வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக துவக்கி வைத்த பிரதமர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இந்த திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.