வலுவான, வளமான இந்தியாவை உருவாக்குவோம்.. புதிய அமைச்சர்களுக்கு பிரதமர் வாழ்த்து...

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்று, புதிதாக பதவியேற்றுக் கொண்ட 43 மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

வலுவான, வளமான இந்தியாவை உருவாக்குவோம்.. புதிய அமைச்சர்களுக்கு பிரதமர் வாழ்த்து...
கடந்த 2019-ல் பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு முதல்முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், 15 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 28 இணை அமைச்சர்கள் என மொத்தம் 43 பேர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், புதிதாக பதவியேற்றுக்கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துப்பதிவில், ’பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அனைத்து சகாக்களுக்கும் வாழ்த்துக்கள் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும், வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதற்கும் நாம் தொடர்ந்து பணியாற்றுவோம்’ எனக் கூறி உள்ளார்.