70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை: ”25 ஆண்டுகளில் இந்தியாவை...” பிரதமர் மோடி!

70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை: ”25 ஆண்டுகளில் இந்தியாவை...” பிரதமர் மோடி!

அரசு துறைகளில் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ’ரோஜ்கார்’திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்படி, முதலில் 75 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு வேலைக்கான பணி நியமனங்களை வழங்கினார். 

இதையும் படிக்க : வனத்துறையினருக்கு 200 மின்சார வாகனங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

அந்த வகையில், இதன் ஒரு பகுதியாக இன்று, 70 ஆயிரத்து 126 பணி நியமன ஆணையை காணொலி வாயிலாக பிரதமர் மோடி வழங்கினார். இதனைதொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணையை வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாகவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், அரசுப் பணிகளில் இறங்குபவர்களுக்கு இது மிகவும் முக்கியமான காலகட்டம் என்றும், இங்கு புதிதாக நியமிக்கப்படுபவர்கள் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்குடன் பயணிக்க வேண்டுமென்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இந்தியாவில் தீர்க்கமான அரசாங்கம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.