செவிலியர்களின் பாடப்புத்தகத்தில் வரதட்சணையை ஆதரித்து கருத்து - இந்திய நர்சிங் கவுன்சில் கண்டனம்!!

செவிலியர்களின் பாடப்புத்தகத்தில் வரதட்சணையை ஆதரித்து கருத்து - இந்திய நர்சிங் கவுன்சில் கண்டனம்!!

வரதட்சணையை ஆதரிக்கும் வகையில் செவிலியர்களின் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற கருத்துக்கு இந்திய நர்சிங் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.

பி.எஸ்.சி 2ம் ஆண்டு பயிலும் செவிலியர் மாணவர்களுக்கான சமுகவியல் பாடப்புத்தகத்தில், வரதட்சணையை ஆதரித்து எழுத்தாளர் டி.கே. இந்திராணி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் இது சமூக வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, அழகற்ற பெண்கள் கூட அழகான ஆண்களை  திருமணம் செய்து கொள்ள உதவுவதாகவும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வரதட்சணைக்கு ஆதரவாக பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சை கருத்துகள் வலைதளங்களில் வைரலான நிலையில், சட்டத்திற்கு விரோதமான கருத்துக்களை பாடப்புத்தகங்களில் சேர்க்கக்கூடாது என இந்திய நர்சிங் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.