புதுச்சேரியில் மதுக்கடைகளை திறங்க... ஆளுநரிடம் பாஜக எம்.எல்.ஏ கோரிக்கை

புதுச்சேரியில் மதுகடைகள திறக்க கோரி பாஜக எம்.எல்.ஏ  ஒருவர் துணைநிலை ஆளுநரிடம் பேசிய  ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் மதுக்கடைகளை திறங்க...  ஆளுநரிடம் பாஜக எம்.எல்.ஏ கோரிக்கை

புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது இதன் காரணமாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

 இதனால் மதுபிரியர்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்களை அதிக விலை கொடுத்து வாங்கி குடித்து வருகின்றனர்.

இந்நிலையில் காமராஜர் நகர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் மதுபானங்கள் கிடைக்காமல் பலர் சானிடைசர் போன்றவற்றை குடித்து உயிரை மாய்த்துக்கொள்வதால் அரசு மதுபான கடைகளை உடனே திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.