சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு துவக்கம்..!!

சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு துவக்கம்..!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கான 'ஆன்லைன்' முனபதிவு துவங்கியது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.

நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் வழக்கம்போல சபரிமலையின் 'sabarimalaonline.org' என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என  திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது.