ஓராண்டுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட கொரோனாவால் உயிரிழந்த இருவரின் உடல்கள்..!

மருத்துவர்களின் அலட்சியத்தால் பிணவறையிலேயே கிடந்த அவலம்..!

ஓராண்டுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட கொரோனாவால் உயிரிழந்த இருவரின் உடல்கள்..!

பெங்களூருவில் அதிகாரிகளின் அலட்சியத்தால், கொரோனா வைரசில் உயிரிழந்த இருவரின் உடல்கள், ஓராண்டுக்குப் பிறகு பிணவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ராஜாஜி நகரில் உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில், கடந்தாண்டு பயன்படுத்தப்பட்டு வந்த பிணவறையில் போதுமான இடம் இல்லாததால், மருத்துவமனையில் புதிதாக பிணவறை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இதனையடுத்து பழைய பிணவறையை பயன்படுத்தாமல், அதிகாரிகள் விட்டு விட்டனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று பழைய பிணவறையை சுத்தம் செய்ய மருத்துவமனை பெண் ஊழியர் சென்றபோது, அங்கு இரண்டு பிணங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணத்தின் அடையாளம் துர்கா மற்றும் முனிராஜ் என்பதும், அவர்கள் இருவரும் கொரோனா வைரசால் உயிரிழந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அழுகிய நிலையில் உள்ள உடல்களை, விக்டோரியா மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.