வடகிழக்கு பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன?

வடகிழக்கு பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன?

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் இயல்பைவிட 115 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கணக்கீடு:

தென்மேற்கு பருவமழை கணக்கீடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இயல்பைவிட இந்த ஆண்டு 54 சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு: 

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காலத்திற்கான நீண்டகால முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பருவமழையின் முதல் மாதமான அக்டோபர் மாதத்தில் இயல்பை விட 115 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் மழைப்பொழிவு இருக்கும் என்றும் கணித்துள்ளது.

இதையும் படிக்க: இனி நாங்கள் ஜீரோ இல்லை ஹீரோ...ஜெயக்குமாருக்கு தக்க பதிலடி தந்த வைத்திலிங்கம்!

இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.