அவதூறு வழக்கு தொடர்பாக ஒருபோதும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிகிறது என ராகுல்காந்தி கூறியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு ஜாமீனும் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, வரும் 4ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் சட்டத்தை மனுதாரர் தவறாக பயன்படுத்த நினைப்பதாகவும், ஜனநாயகக் குரல்வலையை மன்னிப்பு கேட்டு அடக்க முடியாது எனவும் ராகுல்காந்தி தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ” மக்களவைக்கு வரப் போவதில்லை” - சபாநாயகர் ஓம்பிர்லா.