கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி உதவி வழங்கினார் மம்தா!!

கலவரத்தில் உறவினர்களை பறிக்கொடுத்த குடும்பத்தினருக்கு மம்தா நேரில் ஆறுதல்- ரூ.5 லட்சம் நிதி உதவி!!

கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி உதவி வழங்கினார் மம்தா!!

மேற்குவங்க மாநிலம் பிர்பூமில் 10 பேர் எரித்து கொல்லப்பட்ட நிலையில் , அவர்களின் குடும்பத்தினரை முதலமைச்சர் மம்தா பேனர்ஜி  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிர்பும் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாக அண்மையில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் வீட்டில் அடைக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று அக்கிராமத்திற்கு சென்ற முதல்வர் மம்தா பேனர்ஜி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.  

மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதோடு, தீயில் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.