குடிமகன்களுக்கு அதிர்ச்சி... மதுபானங்களின் விலை 20% உயர்வு... புதுச்சேரியில் இன்றுமுதல் அமல்...

புதுச்சேரியில் அனைத்து மதுபானங்களின் விலையும் இன்று முதல் 20 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

குடிமகன்களுக்கு அதிர்ச்சி... மதுபானங்களின் விலை 20% உயர்வு... புதுச்சேரியில் இன்றுமுதல் அமல்...

புதுச்சேரியில் 450-க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள், 96 சாராயக்கடைகள், 75 கள்ளுகடைகள் உள்ளன. 2017க்கு பிறகு புதுச்சேரி அரசு கலால்துறை, திடீரென்று கலால்வரியை கடந்த 2019 பிப்ரவரியில் உயர்த்தியது. அதைத் தொடர்ந்து 2019 ஜூலையில் மீண்டும் விலையை அரசு உயர்த்தியது.

பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மதுபானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டு, தமிழகத்துக்கு இணையாக மதுபானங்கள் விலை இருந்தன. இந்நிலையில் கொரோனா வரி கடந்த மாதம் நீக்கப்பட்டு விலை குறைந்தது.

இந்த நிலையில் இந்திய தயாரிப்பு அல்லது வெளிநாட்டு தயாரிப்பு அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து 20 சதவீதம் அளவுக்கு விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.