கொல்கத்தா: புத்தக கண்காட்சியில் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற நடிகை.. சிக்கியது எப்படி தெரியுமா??

கொல்கத்தாவில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் திருடிய தொலைக்காட்சி நடிகை ரூபா தத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா: புத்தக கண்காட்சியில் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற நடிகை.. சிக்கியது எப்படி தெரியுமா??

மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்றது. அதற்கு தொலைக்காட்சி நடிகை ரூபா தத்தா நேற்று முன்தினம் சென்றுள்ளார்.

அங்கு, அவர் ஒரு பணப்பையை குப்பைத் தொட்டியில் வீசியதை ஒரு போலீஸ் அதிகாரி கண்டார். அதன்பின் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவரின் பதிலில் தடுமாற்றத்தை கண்ட போலீசார், அவரின் 'பேக்கை'-கை சோதனையிட்டத்தில், பல பர்ஸ்கள் மற்றும் ரூ.75,000 ரொக்க பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பணப்பையை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, அது உங்களுடையதா என மற்றவர்களிடம் கேட்டு அவர்களின் கவனத்தை திசை திருப்பி, அவர்களின் பணப்பையைத் திருடுவதே அவரது வழக்கமாகக் தொழிலாக இருந்துள்ளது..

இந்நிலையில், அவரை ஐ.பி.சி. 379 (திருட்டு) மற்றும் 411 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்த போலீசார், வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.