கர்நாடக தேர்தல்...! மரக்கிளையில் கட்டுக்கட்டாக பதுக்கப்பட்ட பணம் பறிமுதல்...!!

கர்நாடக தேர்தல்...! மரக்கிளையில் கட்டுக்கட்டாக பதுக்கப்பட்ட பணம் பறிமுதல்...!!

காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர் வீட்டில் மரத்தின் கிளையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலம் மைசூரு நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணிய ராய். இவர் மங்களூரு நகர் புத்தூர் தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் ராய் உடன் பிறந்த சகோதரர் ஆவார். இவரது வீட்டில் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மைசூர் நகரில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர்.

அப்பொழுது வீட்டின் பின்புறம் அழகுக்காக வளர்க்கபடும் ஒரு கோரோட்டன் மரத்தின் கிளையில் மாம்பழம் அடைத்து வைக்கப்படும் அட்டைப்பெட்டியில் ஒரு கோடி ரூபாய் அடைத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகின்றது.

இதையும் படிக்க:கீழ்பவானி ஆற்றை கான்கிரீட் தளமாக மாற்றும் முயற்சி...! கைவிட சீமான் வலியுறுத்தல்...!!