வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஜியோ... பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்த முடிவு...

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஜியோ... பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்த முடிவு...

இந்தியாவில் செல்போன் சேவை வழங்குவதில் ஏராளமான நிறுவனங்கள் இருந்தாலும், ஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் முன்னணி வகித்து வருகின்றன. இவர்களுக்கு போட்டியாளர்கள் இவர்கள் மட்டுமே என்பதால், தங்கள் தேவைக்கேற்பே செல்போன் சேவை கட்டணங்களை உயர்த்திக் கொள்கின்றன.

இந்த நிலையில்  பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்துவதாக, ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு, டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏர்டெல், வோடபோன் ஐடியாவை தொடர்ந்து ஜியோவும் அதிரடியாக விலையை உயர்த்தியதால்,  ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.