ஜம்மு-காஷ்மீர் காவலர்களுக்கு இந்தியாவின் உயரிய விருது...

இந்தியாவின் மிக உயரிய அசோக சக்ரா விருது ஜம்மு-காஷ்மீர் காவலருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் காவலர்களுக்கு இந்தியாவின் உயரிய விருது...

இந்தியாவின் மிக உயரிய அசோக சக்ரா விருது ஜம்மு-காஷ்மீர் காவலருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 75வது சுதந்திர தினமான இன்று, பல்வேறு தரப்பினரின் பணியை பாராட்டும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரில் அமைதியை நிலை நாட்ட உதவியதாக, நாட்டின் உயரிய அசோக சக்ரா விருது ஜம்மு-காஷ்மீர் உதவி எஸ்ஐ பாபு ராம் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் பயங்கரவாதிகளை களை எடுக்கும் பணியில் முக்கிய பங்காற்றியவர். இதேபோல் ஸ்ரீநகரை சேர்ந்தவரும், ஜம்மு-காஷ்மீர் காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றியவருமான அல்டஃப் ஹசைன் பாத் என்பவருக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

இவர் கடந்தாண்டு பாதுகாப்பு பணியின் போது பயங்கரவாதிகளால் குண்டு காயங்கள் ஏற்பட்டு வீரமரணமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.