இன்ஜினியரிங் படிச்சிருக்கியா? அப்போ உனக்கு வேலை கன்பார்ம்! அழைக்கிறது இன்போசிஸ் நிறுவனம்

நாடு முழுவதும் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்த 35 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க  இன்போசிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஜினியரிங் படிச்சிருக்கியா? அப்போ உனக்கு வேலை கன்பார்ம்! அழைக்கிறது இன்போசிஸ் நிறுவனம்

நாடு முழுவதும் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்த 35 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க  இன்போசிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் வேலை இழந்து தவித்து நிலையில் புதிதாக படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது பெரும் சிரமம். இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனம் நாடு முழுவதும் 35 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு  வேலை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இந்த புதிய பணியாளர்கள் சேர்க்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனம் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது. இந்த காலாண்டில் சுமார் 8 ஆயிரத்து 300 பேர்களுக்கு வேலை வழங்கி உள்ளது. இந்த நிலையில் மேலும் 35 ஆயிரம் புதிய பணியாளர்களை பணியில் சேர்ந்துக் கொள்ள இன்போசிஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவின் ராய் தெரிவித்துள்ளார்.