பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்...!

பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்...!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அவசர கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி பேசினார். இதற்கு  இந்தியாவின் நிரந்தர மிஷன் கவுன்சிலர் பிரதிக் மாத்தூர், பாகிஸ்தானுக்கு கண்டனத்தை பதிவு செய்தார்.

இதையும் படிக்க : அனைத்து துறைகளையும் நாசமாக்கியது பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகள் - சோனியாகாந்தி குற்றச்சாட்டு!

மேலும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து, அவர்களுக்கு பாதுகாப்பான புகலிடங்களை வழங்கும் ஒரு நாடாக பாகிஸ்தான் தன்னையும் அதன் சொந்த செயல்பாடுகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கூறி விமர்சனம் செய்தார்.