பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுலுடன் களமிறங்கிய கமல்ஹாசன்...!

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுலுடன் களமிறங்கிய கமல்ஹாசன்...!

இந்தியாவின் கடந்த கால பெருமையை மீட்டெடுக்க ஒற்றுமை பயணம் போன்று பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன்:

டெல்லியில் நடைபெற்ற ராகுல்காந்தியின் ஒற்றுமை பயண யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

இதையும் படிக்க: ஜே.இ.இ தேர்வு குறித்து தேசிய தேர்வு முகமையின் முடிவு...வரவேற்கும் அன்புமணி ராமதாஸ்!

அப்போது அரசியலமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வரும்போது எந்த கட்சியாக இருந்தாலும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என தெரிவித்தார். மேலும் யாத்திரையில் பங்கேற்பது அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என பலர் கூறினார்கள்.

ஆனால், தனது மனசாட்சியை கேட்டு யாத்திரையில் பங்கேற்றதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.