போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றால் சுட்டுத்தள்ள வேண்டும்..! பாஜக முதல்வர் சர்ச்சைப் பேச்சு.! 

போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றால் சுட்டுத்தள்ள வேண்டும்..! பாஜக முதல்வர் சர்ச்சைப் பேச்சு.! 

போலீசாரின் கஸ்டடியில் இருந்து தப்பிக்க முயலும் குற்றவாளிகளை சுடுவதை ஒரு நடைமுறையாக மாற்ற வேண்டும் என அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

அசாம் மாநில முதல்வராக பாஜகவை சேர்ந்த ஹிமாந்த பிஸ்வா சர்மா இருக்கிறார். இவர் மாநிலத்தில் காவல்துறையின் தரத்த சீரமைப்பது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், போலீசாரின் கஸ்டடியில் இருந்து தப்பிக்க முயலும் குற்றவாளிகளை சுடுவதை ஒரு நடைமுறையாக மாற்ற வேண்டும் என்று கூறினார். 

முதல்வரின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் கடந்த மே மாதம் முதல் அசாம் மாநிலத்தில் போலீசாரின் கஸ்டடியில் இருந்து தப்பிக்க முயன்ற 12 குற்றவாளிகள் மற்றும் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருபவர்கள் சுடுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.