பி.வி. சிந்துவுக்கு ஐஸ்கிரீம் விருந்து... பிரதமர் மோடி விருப்பம்... 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடிந்து இந்தியா திரும்பும் பாட்மின்டன் வீராங்கனை பி. வி. சிந்துவுடன் ஐஸ்கிரீம் சாப்பிட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பி.வி. சிந்துவுக்கு ஐஸ்கிரீம் விருந்து... பிரதமர் மோடி விருப்பம்... 

சர்வதேச வீரரங்கள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியானது டோக்கியோவில் வருகிற 23ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களுடன் நேற்று காணொளியில் உரையாடிய பிரதமர் மோடி அவர்களை உற்சாகமூட்டி வாழ்த்தினார்.

அப்போது சிந்துவிடம், ஒலிம்பிக் போட்டி முடிந்து திரும்பியதும் ஐஸ்கிரீம் விருந்து அளிப்பதாக கூறியுள்ளார். முன்னதாக ஒலிம்பிக் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்த சிந்து, தனது பயிற்சியாளர் தன்னை ஐஸ்கிரீம் கூட சாப்பிட விடுவதில்லை, பழங்களை மட்டுமே உட்கொள்ள அனுமதிப்பதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.