தாய்மொழியை அதிகம் பயன்படுத்த உறுதிமொழி ஏற்போம் - அமித்ஷா வேண்டுகோள்!

தாய்மொழியை அதிகம் பயன்படுத்த உறுதிமொழி ஏற்போம் - அமித்ஷா வேண்டுகோள்!
Published on
Updated on
1 min read

தாய்மொழியை அதிகம் பயன்படுத்துவதற்கு உறுதிமொழி எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

சர்வதேச தாய்மொழி நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த நாளில் தாய் மொழியுடன் இணைந்து அம்மொழியை மேலும் வளர்க்க உறுதியேற்போம் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குழந்தைகள் தாய்மொழியில் எழுதியும் பேசியும் சிந்திக்கும் போது அவர்களின் சிந்தனைத் திறன், ஆராயும் திறன் மற்றும் பகுப்பாய்வு திறன் ஆகியவை அதிகரிக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com