பாஜகவிற்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்... மோர்பி பால விபத்து மோடி தான் காரணாமா? கார்கே கூறுவதென்ன!!

பாஜகவிற்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்... மோர்பி பால விபத்து மோடி தான் காரணாமா? கார்கே கூறுவதென்ன!!

மோர்பி பாலம் விபத்து குறித்து குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.  

நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்:

மோர்பி பாலம் இடிந்து விழுந்தது குறித்து குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து பாஜக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதனோடு இந்த வழக்கில் குஜராத் அரசு அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் பதில்கள் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உள்துறை, நகர்ப்புற உள்துறை, மோர்பி நகராட்சி மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை இதில் அடங்கும். 

கால அவகாசம்:

வழக்கின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்தும் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

அடுத்தக்கட்ட விசாரணை:

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மோடி தான் காரணமா?:

குஜராத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஈர்ப்பு’ தான் காரணமா என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    10 % இடஒதுக்கீடு: ஆதரவும் எதிர்ப்பும்!! உச்சநீதிமன்ற அமர்வின் பரப்பரப்பு தீர்ப்பு!!