தடுப்பூசி போட்டுக்கொண்டு அனைவரும் பாகுபலி போல் மாறுங்கள்! மோடி வேண்டுகோள்!!  

மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாகுபலி போல் வலுவானவராக உருவாக வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டு அனைவரும் பாகுபலி போல் மாறுங்கள்! மோடி வேண்டுகோள்!!   

மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாகுபலி போல் வலுவானவராக உருவாக வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லியில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். டெல்லியில் மழை பெய்து வரும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் குடை பிடித்தபடி பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதத்திற்கு எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

மேலும் மத்திய அரசு கூறும் விளக்கத்தையும் எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாகுபலி போல் அனைவரும் உருவாக வேண்டும் எனவும் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எனவும் கேட்டுக்கொண்டார்.